சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

October 8, 2022

சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. சென்னையில் ரூ.608 கோடி செலவில், 179 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. பிராட்வே என்எஸ்சி போஸ் சாலை மற்றும் வால்டாக்ஸ் சாலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் எந்த அளவு முடிந்திருக்கிறது என்பதை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu