முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டார்.
அதே போல் இன்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து இதில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைய என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். இதைத் தொடர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளது. எந்த மாவட்டத்தில் திட்டத்தின் செயல்பாடு பின்தங்கி உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.