நீர்வளத்துறை சார்பில் அனைத்து உதவி செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வழங்கினார்.தமிழகத்தில் நீர்வளத்துறை ஆனது நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தி குடிநீர், தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு நீரை வழங்குவதிலும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கி அதனை நல்ல முறையில் பராமரிப்பதிலும் பாசன கட்டமைப்புகளுக்கான அணைகள்,அணைக்கட்டுகள் உருவாக்குவது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதில் நீர்வளத் துறையின் திட்ட உருவாக்க பிரிவின் கீழ் உள்ள அனைத்து உப கோட்டங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்குவதற்காக மூன்று கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 வாகனங்கள் வழங்கிடும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கு அங்குள்ள 4 வாகனங்களுக்கான சாவியை உதவி செயற்பொறியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உட்பட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.