சென்னை கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கே.கே.நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.28 கோடி மதிப்பில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம் கட்டப்பட்டது. இந்த அலுவலக கட்டடத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.