முதலமைச்சர் கோப்பை விளையாட்டு மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். அதில் 33,000 வீரர் மாநில விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என 4 நகரங்களில் நடைபெறுகிறது, இதில் 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதன் மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாகும்.