தலைமை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் துவக்கம்

January 6, 2023

டெல்லியில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் மாநாடு தொடங்கியுள்ளது. டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நிதி ஆயோக் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு […]

டெல்லியில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.

டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நிதி ஆயோக் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வளர்ச்சி உள்ளடக்கிய மனித மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், சிறு குறு தொழில்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu