அமெரிக்கா - டெக்சாஸ் வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

May 8, 2023

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில், திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில், வளாகத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் காவல்துறை தலைவர் ப்ரயன் ஹார்வி இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார். […]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில், திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில், வளாகத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் காவல்துறை தலைவர் ப்ரயன் ஹார்வி இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார்.

இந்த வணிக வளாக துப்பாக்கி சூடு குறித்து டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபட் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 198 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu