சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்க வேண்டும் என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சியைப் பார்ப்பது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்க வேண்டும் என்றும், 2 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், 13 முதல் 18 வயதுடையவர்கள் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் தூங்குவதற்கு முன் செல்போன் மற்றும் டேப்லெட்டுகளைப் பயன்படுத்தக்கூடாது. 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் தினசரி சராசரியாக 6 மணி நேரம் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதாக பொது சுகாதார மந்திரி ஜாகோப் போர்ஸ்மெட் கூறியுள்ளார்.