சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பிணிரா ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
தென் அமெரிக்க நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பிணிரா 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் அவர் நேற்று பிரபல சுற்றுலா தலமான ரகோ ரங்கோ பகுதிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அதில் அவர் உட்பட நான்கு பேர் பயணம் செய்தனர். ரகோ ரங்கோ பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெபஸ்டின் பிணிரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் அவருடன் பயணித்த மீதம் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வரவில்லை. அவருடன் பயணித்த மூன்று பேர் யார் என்ற தகவலும் வெளியாகவில்லை.