சிலி காட்டுத் தீயில் சிக்கி 112 போ் பலி

February 5, 2024

சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர். தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத்தீ உருவாகியுள்ளது. இதில் சுமார் 112 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சனி அன்று சிலி நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. கோடைகால காற்றும் சேர்ந்ததால் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தீயில் சுமார் 1100 வீடுகள் முற்றிலும் எரிந்து போயின. […]

சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர்.

தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத்தீ உருவாகியுள்ளது. இதில் சுமார் 112 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சனி அன்று சிலி நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. கோடைகால காற்றும் சேர்ந்ததால் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தீயில் சுமார் 1100 வீடுகள் முற்றிலும் எரிந்து போயின. 26 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் எரிந்து சேதம் ஆகின. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ராணுவ வீரர்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். இது வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதையே காட்டுகிறது.

இது குறித்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிஸ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு அதிகாரிகள் அறிவுறுத்தினால் இருப்பிடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கூறுவதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu