சிலி நாட்டில், வில்லாரிக்கா எரிமலை சீற்றம்

December 6, 2022

சிலி நாட்டின் பனி சூழ்ந்த வில்லாரிக்கா எரிமலை, அண்மையில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டது. எனவே, தற்போது சீற்றம் அடைந்து, தீ பிழம்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல், வில்லாரிக்கா எரிமலையில் வாயு வெளியேற்றம் மற்றும் புவியியல் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சுமார் 28 7 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை, சுமார் 220 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. மேலும், லாவா குழம்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் […]

சிலி நாட்டின் பனி சூழ்ந்த வில்லாரிக்கா எரிமலை, அண்மையில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டது. எனவே, தற்போது சீற்றம் அடைந்து, தீ பிழம்புகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதல், வில்லாரிக்கா எரிமலையில் வாயு வெளியேற்றம் மற்றும் புவியியல் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சுமார் 28 7 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை, சுமார் 220 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. மேலும், லாவா குழம்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், எரிமலையை சுற்றி உள்ள 15 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 28000 மக்கள் வசிக்கிறார்கள். அத்துடன், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். எனவே, ஆபத்தை உணராமல், எரிமலை வெடிப்பினால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எரிமலை கடந்த 2015 ஆம் ஆண்டு சீற்றம் அடைந்தது. ஆனால்,மிகப்பெரிய வெடிப்பு கடந்த 1984 ஆம் ஆண்டு ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu