வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக அறிவிப்பு வெளியானது . ஆனால் பிரிட்டன் பொதுச்சபையின் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் சீன அதிகாரிகளின் வ௫கைக்கு தடை விதித்துள்ளார். அதாவது
சீனாவின் ஸின்ஜியாங் பகுதியில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக அந்த எம்.பி.க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சீனாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதற்கு பதிலடியாக ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வ௫ம் சீன அதிகாரிகள் பார்லிமென்ட் வளாகத்திற்குள் நுழையக் கூடாது என பிரிட்டன் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது .