உலக வரலாற்றில் முதல் முறையாக, குளோனிங் முறையில் ஆரோக்கியமான குரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
உலக வரலாற்றில் முதல் முறையாக, டோலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே போன்ற வழிமுறைகளை பின்பற்றி, சிறிய மாற்றங்களை மட்டும் ஏற்படுத்தி, ஆரோக்கியமான குரங்கை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கடந்த ஜனவரி 16ஆம் தேதி, இந்த குளோனிங் குரங்கு நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், எதிர்கால குளோனிங் ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Re Tro என்ற குளோனிங் குரங்குக்கு 17 மாதங்கள் ஆகிறது. அதன் புகைப்படம் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.