சீனா - 3வது முறையாக அதிபர் பதவியில் ஜி ஜின்பிங்

October 25, 2022

சீனாவின் அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் 2300 நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநாடு கடந்த 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளில், கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரே சீனாவின் அதிபராகவும் தொடர்வார் என்பதால், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக பொறுப்பு வகித்து புதிய வரலாறு படைக்க உள்ளார். இதுவரை ஒரே நபர் 10 […]

சீனாவின் அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் 2300 நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநாடு கடந்த 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளில், கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரே சீனாவின் அதிபராகவும் தொடர்வார் என்பதால், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, ஜி ஜின்பிங்
சீனாவின் அதிபராக பொறுப்பு வகித்து புதிய வரலாறு படைக்க உள்ளார். இதுவரை ஒரே நபர் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக பொறுப்பு வகிக்க முடியாது என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டம் கடந்த 2018 நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நபர் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வது சீனாவில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்சியின் இறுதி நாள் கூட்டத்தில், முன்னாள் அதிபர் ஹூஜின்டாவோ வெளியேற்றப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனினும், அந்தக் கூட்டத்தில் அவர் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கேகியாங் ஆகியோருடன் உரையாடிவிட்டு, ஜி ஜின்பிங்கின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றது கேள்விகளை எழுப்பியுள்ளது. அத்துடன், அவர் அங்கிருந்த தாள்களை எடுத்துச் செல்ல முயன்றதை அதிபர் தடுக்கும் காணொளி மற்றும் புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

மாநாட்டின் இறுதி நாள் அன்று மட்டும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால், இந்த இறுதி நாள் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், இந்த நிகழ்வுக்கு பின்னர், ஹூஜின்டாவோவின் சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் அவரைப் பற்றிய இணையதள தகவல்கள் சீனா அரசால் முடக்கப்பட்டது. எனவே, இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசியல் சாணக்கியர் என்று அறியப்படும் நீல் தாமஸ், ஹூஜின்டாவோ வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அதிபராக பொறுப்பேற்ற பின்னர், ஜி ஜின்பிங் உரையாற்றினார் அப்போது, “மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். அதனை திறம்பட பயன்படுத்திக்கொண்டு, எனது கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், சீன மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று உறுதி ஏற்றார். மேலும், “உலகிற்கு சீனா தேவை; சீனாவின் வளர்ச்சிக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை” என்று கூறினார். சீனாவின் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்ட போதிலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள சீன நாடாளுமன்ற ஆண்டு கூட்டத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மாசேதுங் க்குப் பிறகு சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu