சீனாவின் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியாகினர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று பிற்பகல் இந்த வணிக வளாகத்தில் திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. உடனே இந்த வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்தபடியே வெளியே ஓடினர். இருப்பினும், இந்த தீயில் பலர் சிக்கி மாண்டனர். இதுவரை சுமார் 39 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மேலும் பல தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.