அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா 

அருணாசல பிரதேசத்தில் தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இது முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம். கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 […]

அருணாசல பிரதேசத்தில் தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இது முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம். கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோன்று, அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. திபெத்தின் தெற்கு பகுதி தங்களின் உள்ளார்ந்த பகுதி என்றும் தெரிவித்தது.

அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஜி-20 கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா பங்கேற்கவில்லை. இதற்கான காரணமும் சீன அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu