2027 ஆம் ஆண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் வாய்ப்பை சீனா பெற்றுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த முறை 2025 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஸ் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு போட்டியை நடத்த இத்தாலி மற்றும் சீனா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் சீனா இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இத்தாலி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில் போட்டி நடத்துவதற்கு அரசு 92 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஒதுக்க உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இத்தாலி போட்டி நடத்துவதற்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது .அதனைத் தொடர்ந்து சீனா இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பே பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த போட்டியானது பீஜிங் நகரில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. தடகள போட்டிகள் அனைத்தும் இந்த சாம்பியன்ஷிப்பிற்குள் அடங்கும். கடந்த முறை ஹங்கேரியின் புத்தா பெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.