சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சியை மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
சீன பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை கணிக்கப்பட்ட கடல் பகுதியில் சரியாக விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டது.
இந்த சோதனை, சீன ராணுவத்தின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதி என்றும் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையை சீனா கொண்டுள்ளது.