கொரோனா பரவலை தடுக்க பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் சீனா

December 28, 2022

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாகவே இருந்தது. இதனால் பெய்ஜிங் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாவுடன் வாழ பழக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சீனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி […]

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாகவே இருந்தது. இதனால் பெய்ஜிங் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் கொரோனாவுடன் வாழ பழக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சீனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்கள் 5 நாட்கள் ஓட்டலிலும் 3 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu