சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அண்ட் குழுமத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 2020 ல், அண்ட் குழுமத்தின் மிகப்பெரிய ஐபிஓ நடவடிக்கைக்கு சீன அரசு தடை விதித்தது. தற்போது, இந்த நிறுவனத்திற்கு மற்றொரு பெரிய அபராதத்தை விதித்துள்ளது. இது தொடர்பாக அண்ட் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 ஆம் ஆண்டு தொடங்கி, எங்கள் வர்த்தக நடவடிக்கைகளை படிப்படியாக நிறுத்திக் கொண்டு வருகிறோம். மேலும், அரசின் அபராதங்கள் மற்றும் கட்டளைகளை முறையாக பின்பற்றி வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
அலிபாபா என்ற உலகப் புகழ்பெற்ற இணைய வர்த்தகத் தளம் அண்ட் குழுமத்தின் கீழ் இயங்குகிறது இதன் உரிமையாளர் ஜாக் மா ஆவார். சீன அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கருதப்பட்டு, அவரின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தொடர்ந்து தடைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி தலை மறைவில் இருந்த ஜாக் மா, அண்மையில், மீண்டும் சீனாவுக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.