சீனாவின் பெருமைமிகு திட்டமான ‘கியான்ஃபான்’ செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் மூலம், 14,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டிருந்தது. முதற்கட்டமாக, ஆகஸ்ட் 6-ம் தேதி, லாங் மார்ச் 6A ராக்கெட் மூலம் 18 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஆனால், எதிர்பாராத விதமாக, ராக்கெட்டின் மேல்நிலை பகுதி திடீரென சிதறியது. இதனால் ஏற்பட்ட குப்பைத் துண்டுகள் விண்வெளியில் பரவி, மற்ற செயற்கைக்கோள்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனாவுக்கு இந்த தோல்வி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், விண்வெளி பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த நிகழ்வு எழுப்பியுள்ளது. “பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகள் அதிகரித்து வருவதால், விண்வெளி நெரிசல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது” என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.