இந்திய சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வி அடைகிறது. இந்நிலையில், ஜோகினஸ் பார்க் நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு சீன அதிபர் ஜின்பிங் கும் கலந்து கொண்டார். அப்பொழுது இருவரும் இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் வினைமோகன் கூறியதாவது, இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபடும். எல்லை பிரச்சினையில் இரு தரப்பிலும் அமைதியை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர். அதோடு இந்திய-சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.