சீனாவில், கடந்த சில தினங்களாக, கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்கு பின்னர், முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை, மூன்று பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளதாக பெய்ஜிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், சீனாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு 5229 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில், பல மாதங்களாக ‘ஜீரோ கோவிட் பாலிசி’ அமலில் உள்ளது. பொது மக்களுக்கான போக்குவரத்து குறித்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டனர். உலகின் மற்ற பகுதிகளை விட குறைவான கொரோனா இறப்பு என்பதற்காகவே இந்த பூஜ்ஜிய கொரோனா கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. சீனாவில், பொதுமக்களுக்கு கொரோனா சிகிச்சை தாமதமாக வழங்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.