தைவானை நோக்கி 25 போர் விமானங்களை சீனா அனுப்பியதால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன ராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின. மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன. அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தைவான் ராணுவம் போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் அனுப்பி வைத்தது" என கூறப்பட்டுள்ளது.