சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு செய்து வந்த ஷென்சோ 17 திட்ட குழுவினர் பூமிக்கு பத்திரமாக திரும்பி உள்ளனர்.
அண்மையில், ஷென்சோ 18 குழுவினர் டியாங்காங் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் வந்த பிறகு, கடந்த அக்டோபர் 25 முதல், 6 மாத காலமாக டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த ஷென்சோ 17 வீரர்கள் பூமிக்கு திரும்பி உள்ளனர். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, மங்கோலியா பகுதியில் அவர்கள் தரையிறங்கினர். டியாங்காங் விண்வெளி நிலையத்திஎல் புறப்பட்டு 9 மணி நேரம் கழித்து அவர்கள் பூமியில் பத்திரமாக தரையிறங்கினர். Tang Hongbo, Tang Shengjie மற்றும் Jiang Xinlin ஆகிய 3 விண்வெளி வீரர்களும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியாங்காங் விண்வெளி மையத்துக்கு சென்ற இளமையான வீரர்கள் குழு என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.