சீனா - 6 மாதங்களுக்கு பின் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

சீனா, விண்வெளியில், பிரத்தியேகமாக சொந்த விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. தியாங்காங் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள், 6 மாத காலம் விண்வெளி நிலையத்தில் பணி செய்த பிறகு, நேற்று பூமிக்கு திரும்பி உள்ளனர். உள்ளூர் நேரப்படி, நேற்று காலை 6:33 மணி அளவில், ஃபெய் ஜுன்லாங், டெங் கிங்மிங், ஜாங் லூ ஆகிய மூவரும் ஷென்ஜோ 15 விண்கலத்தில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர். கடந்த மே […]

சீனா, விண்வெளியில், பிரத்தியேகமாக சொந்த விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. தியாங்காங் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள், 6 மாத காலம் விண்வெளி நிலையத்தில் பணி செய்த பிறகு, நேற்று பூமிக்கு திரும்பி உள்ளனர். உள்ளூர் நேரப்படி, நேற்று காலை 6:33 மணி அளவில், ஃபெய் ஜுன்லாங், டெங் கிங்மிங், ஜாங் லூ ஆகிய மூவரும் ஷென்ஜோ 15 விண்கலத்தில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர்.

கடந்த மே 30ஆம் தேதி, 3 விண்வெளி வீரர்களுடன் சீன விண்கலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்தது. அவர்கள் அடுத்த 5 மாதங்களுக்கு விண்வெளி நிலைய பணிகளில் ஈடுபட்டு இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வந்த மூவரும் பூமிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள், விண்வெளியில் இருந்த போது, பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, விண்வெளி மருத்துவம் சார்ந்த 28 ஆராய்ச்சிகள், உயிர் சூழலியல் சார்ந்த 38 விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிகள், திரவ இயக்கவியல் ஆகிய பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu