சீனா, 2026-ல் சாங்கே-7 (Chang'e-7) விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், மேலும் "ஃப்ளையர் டிடெக்டர்" எனும் பறக்கும் ரோபோ இருக்கும். நிலவின் நிலையான இருண்ட பள்ளங்களில் பனிக்கட்டி இருப்பதை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கம். நீர் இருப்பதை உறுதிப்படுத்தினால், பூமியில் இருந்து நீர் கொண்டு செல்லும் தேவையை குறைத்து நிலவில் தங்கும் திட்டங்களுக்கு உதவலாம் என சீனா தெரிவித்துள்ளது.
இந்த "சிறப்பு ரோபோ" சரிவுகளில் நிலைநிற்றி, பகல்-இரவு பகுதிகளில் சுதந்திரமாக இயக்கம் செய்யும் திறன் கொண்டது. இதன் மூலமாக, சிறிய ராக்கெட் தூண்டுதல்களைப் பயன்படுத்தி, கி.மீ. கணக்கில் தாவி, நிழல் பகுதி மற்றும் ஒளி பகுதியை கடக்கும். மூன்று முறை இயக்கத்திற்குப் பிறகு, இது சூரிய ஒளியை சக்தியாக பயன்படுத்தும். 2028-ல் Chang'e-8 மூலம் நிலவில் ஆட்டோமேட்டிக் கட்டமைப்பு செய்ய சீனா திட்டமிட்டு, 2030-க்குள் மனிதர்களை அனுப்பவுள்ளது.