சீனாவின் சினோபெக் கார்ப்பரேஷன் கிழக்கு சீனாவில் தனது முதல் கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு ஆலையைத் (CCUS) தொடங்கியுள்ளது . 2025 ஆம் ஆண்டிற்குள் ஹுடாங் மற்றும் ஜியாங்சுவில் மேலும் இரண்டு ஆலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சினோபெக் நிறுவனமானது சீனாவில் சி.சி.யு .எஸ் பைலட் திட்டங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய புதிய சி.சி.யு .எஸ் திட்டமானது, சினோபெக்கின் கிலு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை ஆக்சைடை ஹைட்ரஜன் உற்பத்தி செயல்முறையின் போது கைப்பற்றி, அருகிலுள்ள ஷெங்லி எண்ணெய் வயலில் உள்ள 73 எண்ணெய் கிணறுகளில் செலுத்தும் செயல்பாடாகும். மேலும் சினோபெக் இந்த ஆண்டின் இறுதிக்குள் கார்பன் டை ஆக்சைடை கடத்துவதற்கான குழாய்களை அமைக்கும் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் அடுத்த 15 ஆண்டுகளில் 10.68 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு எண்ணெய் வயலில் செலுத்தப்படும் என்றும், கச்சா எண்ணெய் உற்பத்தி கிட்டத்தட்ட 3 மில்லியன் டன்கள் அதிகரிக்கும் என்றும் சினோபெக் மதிப்பிடுகிறது. சினோபெக் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்குள் ஒரு சி.சி.யு .எஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவி , அதில் சி.சி.யு .எஸ் -ஐ காற்று மற்றும் சூரிய ஆற்றலுடன் இணைப்பது, மற்றும் சி.சி.யு .எஸ் -ஐ ஹைட்ரஜன் ஆற்றல் மற்றும் பயோமாஸுடன் இணைப்பது போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, சினோபெக் 1.52 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றி சேமித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.