காங்கோவில் தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 3 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் தயாரான தங்கம் கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கிவு மாகாணத்தில் சட்ட விரோத தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டனர். அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் கடத்தப்பட்ட வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அந்த வாகனத்தில் இருந்த 3 சீனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.