இன்று காலை, டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த 3 சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, தக்காளி மற்றும் லெட்டியூஸ் அறுவடையில் ஈடுபட்டு சாதனை புரிந்துள்ளனர்.
Jing Haipeng, Zhu Yangzhu மற்றும் Gui Haichao ஆகிய 3 பேரும், கடந்த ஜூன் மாதத்தில் காய்கறி அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், 4 முறை லெட்டியூஸ் அறுவடைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில், 2வது முறையாக தக்காளி மற்றும் வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டனர். விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வாழ்க்கை பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை முழுமையாக கண்காணிக்கவும், உறுதி செய்யவும், இந்த சாகுபடிகள் உதவி செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விண்வெளியில் வாழ்க்கைக்கான சூழல் குறித்த ஆராய்ச்சி தொடர்பாக இவர்கள் பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர்