சீன வெளியுறவுத் துறை அமைச்சர் நாளை புதுடில்லி வருகிறார்

நாளை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் புதுடில்லி வருகிறார். ஜி - 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. ஜி - 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் புதுடில்லியில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க ஜி - 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் […]

நாளை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் புதுடில்லி வருகிறார்.

ஜி - 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. ஜி - 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் புதுடில்லியில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க ஜி - 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் காங் கூட்டத்தில் பங்கேற்க புதுடில்லி வருகிறார். இதை சீன வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.

கடந்த 2019ல் அப்போதைய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, புதுடில்லி வந்து நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதன் பின் இந்தியா - சீனா இடையிலான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு தற்போது நிகழ்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu