செவ்வாய் கிரகத்தில் கூட வாழக்கூடிய அபூர்வ தாவரத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்டார்டிகா மற்றும் மோஜாவே பாலைவனப் பகுதியில் காணப்படும் Syntrichia caninervis என்ற தாவரம், அதிகமான குளிர், அதிகமான கதிர்வீச்சு, அதிகமான வறட்சி போன்ற அனைத்து சூழல்களையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த தாவரத்தை பசுமை இல்லம் அல்லாத சூழலில் வளர்க்க முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்தனர். அத்தகைய சூழலிலும் இந்த தாவரம் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. எனவே, பூமி அல்லாத பிற கோள்களில் மற்றும் விண்வெளியில் வளர்ப்பதற்கு இந்த தாவரம் ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை கார்டியன் இதழில் வெளியாகி உள்ளது.