ரஷியா-உக்ரைன் போரில் சீன வீரர்கள் கைது

April 10, 2025

ரஷியா-உக்ரைன் போரில் சீன வீரர்கள் கைதானது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷியா-உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டில் நீடிக்கிறது. ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவத்தை அனுப்பியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போராடிய 2 சீன குடிமக்கள் உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டொனெட்ஸ்க் பகுதியில் அவர்கள் பிடிக்கபட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆவணங்கள், வங்கி அட்டைகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு […]

ரஷியா-உக்ரைன் போரில் சீன வீரர்கள் கைதானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரஷியா-உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டில் நீடிக்கிறது. ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவத்தை அனுப்பியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போராடிய 2 சீன குடிமக்கள் உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டொனெட்ஸ்க் பகுதியில் அவர்கள் பிடிக்கபட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆவணங்கள், வங்கி அட்டைகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் சூழலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu