சீனா உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் உடைய அக்னி-V போலாஸ்டிக் ஏவுகணையை சோதனையிட இந்தியா திட்டமிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதாக சமீபத்தில் இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் உளவு கப்பலான யுவன் வாங்-5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளது. திங்களன்று இந்தோனேசியாவின் லம்பாக் ஜலசந்தியின் வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீனா உளவு கப்பல் நுழைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவிக்கின்றன. இந்தியா ஏவுகணை சோதிக்க திட்டமிட்டுள்ள தருணத்தில் சீனா உளவு கப்பல் யுவன் வாங்-5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதால் அதன் நடமாட்டத்தை இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.














