சென்னையில் சோழவரம் நீர்மட்டத்தை உயர்த்த திட்டம்

September 29, 2023

சென்னை நகர மக்களின் முக்கிய ஆதாரமாக செயல்பட்டு வரும் சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை மூன்று டிஎம் சியாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன. இந்த ஏரிகளின் மூலம் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரி 18.86 அடி உயரம் உள்ளது. இதில் 1081 மில்லியன் கன அடி மட்டுமே நீர் […]

சென்னை நகர மக்களின் முக்கிய ஆதாரமாக செயல்பட்டு வரும் சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை மூன்று டிஎம் சியாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன. இந்த ஏரிகளின் மூலம் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரி 18.86 அடி உயரம் உள்ளது. இதில் 1081 மில்லியன் கன அடி மட்டுமே நீர் தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவை ஆண்டொன்றுக்கு 20,000 மில்லியன் கன அடியாக உள்ளது. இது மேலும் வரும் ஆண்டுகளில் 25 ஆயிரம் மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்படும் நிலையில் மூன்றாக உயர்த்தப்பட இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu