சைபர் பாதுகாப்புத் துறையில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனம், ஸ்பிளுங்க் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது.ஸ்பிளுங்க் மற்றும் சிஸ்கோ ஆகிய இரு நிறுவனங்களும் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளன. வரும் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் கையகப்படுத்துதல் நடவடிக்கை முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையின் மொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பிளுங்க் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 157 டாலர்கள் தொகையை சிஸ்கோ செலுத்தும் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்படும் சூழலில், இந்த கையகப்படுத்தல் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என சிஸ்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.