சிட்பி விழிப்புணர்வு நிகழ்ச்சி: எம்எஸ்எம்இ கடன் உதவிகள்

November 29, 2024

சென்னையில் சிறு தொழிலுக்கு கடன் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில், சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்பில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் உதவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அதுல் ஆனந்த் சிறப்பு விருது வழங்கினார்.அதுல் ஆனந்த் பேசுகையில், "உலகளாவிய சூழலில் பல்வேறு மாறுதல்களால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான சவால்கள் உள்ளது. இந்தத் தொழில்களுக்கான புதிய நுட்பங்கள், நவீன உற்பத்தி […]

சென்னையில் சிறு தொழிலுக்கு கடன் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னையில், சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்பில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் உதவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அதுல் ஆனந்த் சிறப்பு விருது வழங்கினார்.அதுல் ஆனந்த் பேசுகையில், "உலகளாவிய சூழலில் பல்வேறு மாறுதல்களால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான சவால்கள் உள்ளது. இந்தத் தொழில்களுக்கான புதிய நுட்பங்கள், நவீன உற்பத்தி முறைகள் அவசியமாகும்," என தெரிவித்துள்ளார்.தமிழகம் தற்போது மகாராஷ்டிராவுக்கு பின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது. இதில், எம்எஸ்எம்இ துறையின் பங்கு 45% ஆகும். தமிழகம் முழுவதும் 29 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன, அதில் 10 லட்சம் நிறுவனங்களை பெண்கள் நடத்தி வருகின்றனர்.இதன் மூலம், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரூ.125 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu