குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கு: அக்டோபர் 31ல் விசாரணை

September 13, 2022

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மனுக்கள் மீது அக்டோபர் 31ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்காக குடியுரிமை சட்டத்தில் 2019ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 220 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதாக இந்த […]

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மனுக்கள் மீது அக்டோபர் 31ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்காக குடியுரிமை சட்டத்தில் 2019ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 220 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதாக இந்த சட்டம் உள்ளது என மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி எஸ்.ஆர். பட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

இதையேற்று, வழக்கின் விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், தேவைப்பட்டால் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் அமர்வு கூறியுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu