குடியுரிமை திருத்தச் சட்டத்தை தடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல தரப்பினரின் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த காரணம் கொண்டும் திரும்ப பெறப்படும் மாட்டாது என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அமித்ஷா கூறுகையில் 2019 ஆம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். இந்த சட்டத்தால் சிறுபான்மையின்மையினர் உரிமை பறிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சி ஏ ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற எந்த மாநில அரசுகளுக்கும் உரிமை இல்லை. சட்டத்தை இயற்றுவதற்கும் அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.