அனைத்து மாநகர பேருந்துகளையும் முழு பரிசோதனைக்கு பின்பு தான் இயக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஓடும் பேருந்தில் இருக்கை கீழே இருந்த பலகை விழுந்ததில் பெண் பயணி படுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து மாநகர பேருந்துகளும் முழு பரிசோதனைக்கு பின்னே இயக்க வேண்டும். சென்னையில் இயங்கும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை பாகங்களை சரியாக பரிசோதிக்கவும் இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட பட்டுள்ளது. மேலும் மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.