சூடானில் உள்நாட்டு கலவரம் காரணமாக நீர்மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது.
சூடானில் ராணுவ ஆட்சி நிலவுகின்றது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இந்த மோதலின் காரணமாக உள்நாட்டு கலவரம் வெடித்து, அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 16-ந்தேதி, தலைநகர் கார்டூம் அருகே உள்ள மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை ராணுவப் படையினர் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் நீர்மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. குறிப்பாக, மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்து, மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தலைநகரின் வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியது. தற்போது, அரசாங்கம் நீர்மின் நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.