காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து காணப்படும் கடல் நீர் மட்டம் உயர்வு, கடலோர பகுதிகளில் வாழும் 90 கோடி மக்களை பாதிக்கும் என்று ஐநா சபை பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று கூறும் ஆண்டோனியோ குட்டரஸ், இதனால், இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்று கூறுகிறார். மேலும், நீர்மட்டம் உயர்வதால், பாங்காக், டாக்கா, ஜாக்கர்தா, மும்பை, கெய்ரோ, நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் தீவிர பாதிப்புகளை அடையும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பேரிடர்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "விவிலிய அளவில் முழு மக்கள்தொகையும் பெரும் அளவில் வெளியேறுவதை உலகம் காணும்" என்று கூறிய குட்டரஸ், வரவிருக்கும் பேரழிவுகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.