நாளை முதல் மஞ்சள் நிற பேருந்துகள்

August 10, 2023

நாளை முதல் தமிழகத்தில் மஞ்சள் நிறத்திலான பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன தமிழகத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், பெண்களுக்கான கட்டணமில்லா சேவை பேருந்துகள் பிங்க் நிறத்திலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் புதிதாக 1000 பேருந்துகளை வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்கள் தற்போது புதுக்கப்பட்டு அவற்றிற்கு […]

நாளை முதல் தமிழகத்தில் மஞ்சள் நிறத்திலான பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன

தமிழகத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், பெண்களுக்கான கட்டணமில்லா சேவை பேருந்துகள் பிங்க் நிறத்திலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் புதிதாக 1000 பேருந்துகளை வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்கள் தற்போது புதுக்கப்பட்டு அவற்றிற்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிறம் மட்டும் இல்லாமல் பஸ்களில் இருக்கை வசதிகளும் விரிவாக இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 11-ம் தேதி முதல் 100 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu