இணையவழி விண்ணப்பங்களால் சி.எம்.டி. ஏ திட்ட அனுமதி இரண்டு மடங்கு உயர்வு

February 9, 2024

இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் 30 நாட்களுக்குள் 114 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. திட்ட அனுமதி விண்ணங்கள் அனைத்தும் இணைய வழி மூலம் பெறப்பட்டு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்த பின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதுவரை 27% உயர்ந்துள்ளது. மேலும் இதனால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. இதுவரை 30 நாட்களுக்குள் 114 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். மேலும் […]

இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் 30 நாட்களுக்குள் 114 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

திட்ட அனுமதி விண்ணங்கள் அனைத்தும் இணைய வழி மூலம் பெறப்பட்டு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்த பின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதுவரை 27% உயர்ந்துள்ளது. மேலும் இதனால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. இதுவரை 30 நாட்களுக்குள் 114 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். மேலும் இணையவழி ஒப்புதல் வழங்குவது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. திட்ட அனுமதியை பொருத்தவரையில் வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் சராசரியாக பெறப்பட்டு வரும். ஆனால் இணைய வழி செயல்பாட்டிற்கு வந்த பின் 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி எப்போதும் இல்லாத வகையில் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்தும் இணைய வழி மூலம் செயல்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் மற்றும் அமைச்சர் ஆகிய பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu