இந்தியாவின் பொதுத்துறை நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, 70.1% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பை விட மிகவும் அதிகமாகும். இது உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவிய அசாதாரண பருவநிலை காரணமாக அதிகரித்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, இங்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவாக, லாபம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 77.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 23.7% உயர்ந்து, 351.69 பில்லியனாக பதிவாகியுள்ளது. அத்துடன், நிலக்கரி உற்பத்தி 9.9% அதிகரித்து, 1864 மில்லியன் டன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 15.8% உயர்ந்து, 479.045 மில்லியன் டன் அளவில் பதிவாகியுள்ளது. எனவே, நிகழாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 700 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை கோல் இந்தியா நிறுவனம் எட்டு விடும் என்று கருதப்படுகிறது. அத்துடன், இந்த நிறுவனம், இடைக்கால டிவிடெண்ட் ஆக ஒரு பங்குக்கு 5.25 ரூபாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.