அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் - பிரல்ஹாத் ஜோஷி

அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் நிலையில் இருப்பதாக மத்திய மந்திரி பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக கோல் இந்தியா நிறுவனம் முன்னேற வேண்டும். உற்பத்தியை பெருக்குவதைக் காட்டிலும், நிலக்கரி சுரங்கங்களின் பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் […]

அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் நிலையில் இருப்பதாக மத்திய மந்திரி பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக கோல் இந்தியா நிறுவனம் முன்னேற வேண்டும். உற்பத்தியை பெருக்குவதைக் காட்டிலும், நிலக்கரி சுரங்கங்களின் பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் நிலையில் உள்ளது. மேலும் வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கப்பணிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிய அவர், 87 நிலக்கரி பிரிவுகள் ஏலத்தில் பங்கெடுத்திருப்பதுடன், அவற்றில் சில ஏற்கனவே உற்பத்தியை தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu