கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிளாச்சிமடாவில் கோகோ கோலா நிறுவனத்திற்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நிலத்தை திருப்பித் தர, மாநில அரசு, கொக்ககோலா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, 35 ஏக்கர் நிலத்தை கேரள அரசுக்கு திருப்பித் தர கொக்கோ கோலா நிறுவனம் முன் வந்துள்ளது.
கேரள மாநிலத்தில், விவசாயிகள் தலைமையிலான விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) தொடங்கப்பட உள்ளது. இதற்காக, கோகோ கோலா நிறுவனத்திடம் நிலம் திருப்பி கேட்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகளின் எதிரொலியாக, நிலம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கொக்கோ கோலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜுவான் பாப்புலோ ரோட்ரிக்ஸ் ட்ரோவாடோ, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், விவசாயிகள் பண்ணை அமைப்பதற்கு, தொழில்நுட்ப உதவி வழங்க கொக்கோகோலா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.