கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உட்பட 25 மாவட்டங்களில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா உட்பட வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், காலை வேளைகளில் அடர் பனி நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் 25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், மகர சங்கராந்திக்கு ஜன.14 அன்று அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஜன.15-இல் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், பரத்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு பனிமூட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.