வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து - 15 பேர் பலி

February 23, 2024

வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் ஃபுல்லா லோகா என்ற இடத்தில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இது சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்த திறந்தவெளி தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது தங்க சுரங்கத்தின் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்து போயினர் என தகவல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் […]

வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் ஃபுல்லா லோகா என்ற இடத்தில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

இது சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்த திறந்தவெளி தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது தங்க சுரங்கத்தின் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்து போயினர் என தகவல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்கும் வேலையில் இறங்கினர்.

இந்நிலையில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வந்துள்ளது. இன்னும் சிலர் தங்க சுரங்கத்தில் சிக்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு எண்ணெய் தொழில் துறையுடன் சேர்ந்து அந்நாட்டு அரசு நாடு முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை ஏற்படுத்தியது. இதனால் வைரங்கள், தங்கம், தாமிரம் போன்ற கனிமங்களுக்கான சுரங்க ஏற்பாடுகள் தொடங்கின. அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்களும் பெருகி வந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu