நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
பிளாட்டு மாகாணத்தின் புசாபுஜி என்னும் பகுதியில் செயின்ட்ஸ் அகாடமி என்ற பள்ளி உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட ஈடுபாடுகளில் மேற்கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த விபத்தில் 154 மாணவர்கள் சிக்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது. 132 மாணவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை மையம் கூறுகையில், விபத்து நடந்த உடனே இந்த இடத்தில் மீட்பு பணியினர் விரைந்து சென்று பணிகள் மேற்கொண்டனர் என்றது. இந்த பள்ளியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அருகே அமைந்திருப்பது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நைஜீரியாவில் இதே போன்று கட்டிடம் இடிந்து விழும் சம்பவம் நடைபெற்று வருவது சகஜமாக உள்ளது. கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது இது போன்ற விபத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.